மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் நீண்ட கால இலக்கியத் திட்டமான பேரவைக் கதைகள், சிறுகதை எழுதும் போட்டி, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகமான சிறுகதைகளை வெளியிட்டதால் 33-ஆவது பேரவைக் கதைகள் நூல் மலேசிய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டும் பேரவைக் கதைகள் புதிய பொலிவுடன் மிளிரவிருக்கின்றது.
இச்சிறுகதை எழுதும் போட்டி இம்முறையும் பொதுப் பிரிவு, மாணவர் பிரிவு, அனைத்துலகப் பிரிவு என மூன்று பிரிவுகளோடு 36-ஆவது பேரவைக் கதைகளாக இனிதே மலர்கின்றது. கொடுக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாகப் படித்து உங்களின் படைப்புகளை அனுப்புங்கள். பங்கேற்பாளர்கள் தங்களின் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்புவதற்கு முன்னதாக, கீழ்கண்ட மின்னியல் பாரத்தைத் பூர்த்தி செய்து அனுப்ப மறவாதீர்கள்.
தொடர்புக்கு:
சர்வேந்திரன் சந்தர் ( 016-471 0014 )
யோகராஜன் ஜேம்ஸ் ( 016-303 0525 )