டிஜிட்ஆல் (DIGIT-ALL) அமைப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை வரவேற்கிறது.
டிஜிட்ஆல் (DIGIT-ALL) அமைப்பு இது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தால் உருவாக்கப்பட்டு முன்னாள் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களால் 18-7-2015 அன்று, அதாவது அவர் மறைவிற்கு சரியாக 9 நாட்கள் முன்பு துவக்கப்பெற்று அவர் விதைத்த கடைசி விதை என்ற பெருமையை பெற்றது.
இதன் நோக்கம், தொழில் வணிக நிறுவனங்கள் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தி வளர்ச்சி காண பயிற்சி வழங்குதல்.
கலாம் ஐயா டிஜிட்ஆல் அமைப்பை துவக்கி வைத்து டிஜிட்டல் துணையால் தொழில் வணிகம் வளர்ச்சி பெற நாடு முழுமைக்கும் இதை பரவலாக்கி பயிற்சி வழங்குங்கள் என்றும் அதுவே தன் கனவு என்றும் ஒப்படைத்த பணியை நானும் என் குழுவும் கடமையாக ஏற்று செயல்பட்டு வருகிறோம்.
கலாம் ஐயாவின் கனவையும் அதை நோக்கிய இலக்கையும் அடைய தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வலிமையான குழு அவசியம்.
எனவே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்த, டிஜிட்ஆல் அமைப்பின் நோக்கத்தில் உடன்பாடும், சமுதாய பணியில் அக்கறையும் உள்ள நண்பர்கள் தங்களை இணைத்து பங்களிக்க விரும்பினால் 👇 இதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
நன்றி 🙏
ஜே.கே. முத்து, தலைவர், டிஜிட்ஆல்.
---------------------------------------------------------------
*EC MEMBERS (செயற்குழு உறுப்பினர்கள்)*: டிஜிட்டல் அறிவாற்றலை வழங்கி நம் சமுதாயத்தை மேம்படுத்தும் அப்துல் கலாம் ஐயாவின் கனவை கடமையாக கொண்டு செயல்படும் குழு.
*செயற்குழு (EC) உறுப்பினர்களுக்கான பயன்கள்:*
1) அப்துல் கலாம் ஐயாவின் கனவை கடமையாக கொண்டு செயல்படும் குழுவின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை.
2) இந்தியாவின் இரண்டாவது பெரிய, பாரம்பரியமிக்க தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் கீழ் இயங்கும் வாய்ப்பு.
3) செல்வாக்கு செலுத்துபவராக உருவாகி, சமூக அங்கீகாரத்தை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு.
4) சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உலகளாவிய தொழில் நுட்ப துறையினருடனான தொடர்புகளை ஏற்படுத்தி நட்பு வட்டத்தை விசாலமாக்க வாய்ப்பு.
5) தொழில் சார்ந்த உங்கள் திறமைகளை வெளிப்படுத்த மற்றும் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு.
6) தேவைகள், கோரிக்கைகள் மற்றும் வாய்ப்புகளுக்கு அரசு மற்றும் அதிகார மையங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு.
7)
டிஜிட்ஆல் EC உறுப்பினராக உங்கள் பங்களிப்பே தங்கள் (CSR) நிறுவன சமூக பொறுப்பாக ஏற்க வாய்ப்பு.
-------------------------------------------------------------
*செயற்குழு (EC) உறுப்பினர்களுக்கான விதிமுறைகள் & கடமைகள்*:
1) டிஜிட்ஆல் -ன் பயன்களை உணர்ந்து சந்தா செலுத்தி தங்களை முதலில் ஒரு உறுப்பினராக இணைத்தல்.
2) டிஜிட்டல் அறிவாற்றலை பகிர்வதன் மூலம் வருவாய் பெரும் தொழில் / உத்யோகத்தில் இல்லாதிருத்தல் அவசியம்.
3) டிஜிட்ஆல் -ன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை அறிந்து அதில் உடன்பாடு உள்ளவராக இருத்தல்.
4) சராசரியாக வாரத்தில் 4 மணிநேரம் டிஜிட்ஆல் அமைப்பின் வளர்ச்சிக்காக நேரம் ஒதுக்க தயாராய் இருத்தல்.
5) ஏற்றுகொண்ட பொறுப்புகளை தினசரி / வாரத்தில் சிலமணி நேரங்களை ஒதுக்கி செயலாற்றுதல்.
6) உங்கள் சாப்டர் EC மீட்டிங் அனைத்திலும் கலந்து கொள்ளுதல்.
7) அதிகபட்ச டிஜிட்ஆல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல்.
8) டிஜிட்ஆல் பயன்களை எடுத்துக்கூறி புதிய உறுப்பினர்களை இணைத்தல்.
9) தமிழகம் முழுதும் தங்களை போன்ற ஒத்த கருத்துள்ள டிஜிட்டல் துறை நண்பர்களை இணைத்து பங்காற்ற செய்தல்.
10) உங்கள் BUSINESS CARDS, WEBSITE, SOCIAL MEDIA உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் டிஜிட்ஆல் ப்ராண்டுடன் இணைத்து எங்கும் நிறைந்திருக்க செய்தல்.
11) டிஜிட்ஆல் தொடர்பான நிகழ்வுகளின் விபரங்களை தாங்கள் சார்ந்த ஏதுவான தொடர்புகள், குழுக்கள் மற்றும் சமூக ஊடகம் வாயிலாக பரப்புதல்.
12) டிஜிட்ஆல் -ன் செயல்பாடுகளை வாய்ப்பு கிடைக்கும் சுற்றங்கள் மற்றும் அமைப்புகளில் பகிர்ந்து புகழ் சேர்த்தல்.
13) நமது ஆண்டு நிகழ்வான டிஜிட்ஆல் சங்கமம் நிகழ்வுக்காக ஏதுவான குழுவில் இணைந்து முழு ஈடுபாட்டுடன் பங்களிப்பு வழங்குதல்.
--------------------------------------------------------------