'மண்ணுக்கும் உண்டு மருத்துவ பரிசோதனை' - ஒரு நாள் நிலைய பயிற்சி
விருதுநகர் மாவட்ட விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 20.07.2022 (புதன் கிழமை) அன்று வேளாண்மையில் அதிக மகசூல் பெறுவதற்கு முக்கிய காரணியான நம் மண் வளத்தைப் பற்றி அறிந்து மகசூலை அதிகரிக்க 'மண்ணுக்கும் உண்டு மருத்துவ பரிசோதனை' என்ற தலைப்பில் ஒரு நாள் நிலைய பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மண் பரிசோதனையின் அவசியம், மண் மாதிரி எடுக்கும் முறைகள் பற்றி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளால் விரிவாக எடுத்துரைக்கப்பட இருக்கிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் 19.07.2022 (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்குள் 04566220561, என்ற எண்ணிற்கு அலுவலக நேரத்தில்(9am-5pm) தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். முதலில் வரும் 30 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட தகவல்களை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். சி.ராஜா பாபு தெரிவிக்கிறார்.
மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். குறிப்பு : இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் கீழே உள்ள Google Form Link -ல் கேட்கும் அனைத்து தகவல்களையும் தவறாது நிரப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.