கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 84 பள்ளிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன .
தற்போது 2020-21-ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெற்று வருகிறது. சிறந்த கட்டிட வசதி, பாதுகாக்கப்பட்ட குடி நீர் , கழிப்பிட வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகள், சிறப்பு பயிற்சிகள் (யோகா , கராத்தே முதலானவை ) நன்கு பயிற்சி பெற்ற அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் மிகச் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளில் இணைய வழியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க கீழ் உள்ள விவரங்களை உள்ளீடு செய்யவும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 9442075061, 9842951127 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இணைய வழி சேர்க்கை விண்ணப்பம்